mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அரியலூர் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் ரத்த தானம்

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் ரத்த தானம்

அரியலூர் பெரம்பலூர்  மாவட்ட காவலர்கள் ரத்த தானம்

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதபடை அலுவலகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்குமார் தொடக்கி வைத்தார். முகாமில் அரியலூர்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் உட்பட 60 காவலர்கள் ரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் சுகாதார துறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, அரியலூர் தலைமை மருத்துவமணை மருத்துவர் ரமேஷ் டாக்டர் அறிவுசெல்வன்  மற்றும் அரசு மருத்துவமணை ரத்த பிரிவு ஊழியர்கள் ரத்தம் சேகரித்தனர்.இதேபோல்

பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் தொடக்கி வைத்து பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த பிரிவு மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 57 காவலர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.

நிகழ்ச்சியில், கூடுதல் கண்காணிப்பாளர் தங்கவேல், துணை கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், குமரவேல், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஜே.அரவிந்தன், ஆய்வாளர்கள் வனிதா, ஸ்ரீதர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

.

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *