குப்பை தொட்டியா? தமிழகம் போராட்டம் கண்டு அச்சபடுகிறது அரசு. நாம்தமிழர் சீமான் கோபம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசை அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு அவர் கூறியது.
எதிர் கட்சிகளின் போராட்டங்களை பார்த்து அச்சமடையும் அரசு
மக்களின் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களை மக்களிடம் தனிமைபடுத்த பொய் வழக்குகளை போட்டு நீதிமன்றங்களுக்கு செல்ல வைக்கிறார்கள்.
தமிழக அரசு மக்கள் போராட்டகளுக்கு அரசு அனுமதி தருவதில்லை
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நாம தமிழர் போட்டியிடுவோம்.
ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஆட்சி உள்ளது. எதிர்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கும் செயல் ஆகும்.
எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைய வேண்டும் என அவசியம் இல்லை. அந்த அந்த கட்சிகளின் கொள்ளை படி தனித்தனியாக போராட்டங்கள் நடத்துவது சரியானது தான்
உள்ளாட்சி மன்ற தேர்தலில் நடத்தினால் அதிமுக வெற்றி பெறாது என்ற எண்ணத்தில் தான் தமிழக அரசு தேர்தலை நடத்தவில்லை.
அனைத்து நாசகாரதிட்டங்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க காரணம் அதனை எதிர்க்க துணிவில்லாத அரசு இருப்பதால் தான்.
இதன் மூலம் தமிழகத்தை குப்பை தொட்டியாக மாற்ற தமிழக அரசு செயல்பட்டுவருகிறது என குற்றம் என கூறியவர்
சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்க வேல் விசாரணையில் முக்கிய நபர்களின் தொடர்புடையது என கண்டறியப்பட்டதால் அந்த விசாரணையை முடக்கி சிபிஐ விசாரணையை கோருவது அரசிற்க்கு அவமானம் என்ற தகவலையும் தெரிவித்தார்.
Thanks for shening. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/en/register?ref=P9L9FQKY