சம்பளம் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி சம்பளம் வழங்கக்கோரி அரியலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி அலுவலர்கள் ஓரிரு நாட்களில் நிலுவையுள்ள சம்பளம் வழங்கப்படும் எனக்கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.அதேபோல், உடையார்பாளையம் பேரூராட்சியிலும் சம்பளம் கேட்டு முற்றுகை போரான்னம் செய்தனர்.