மணல் குவாரி அமைக்க நிரந்தர தடைக்கோரி கொள்ளிடம் நீராதார குழு ஆட்சியரிடம் மனு
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமானூர் ஒன்றிய பகுதியை சேர்ந்த மக்கள் கொள்ளிடம் நீராதார பாதுகாப்புகுழு ஒன்றை ஏற்படுத்தி பல போராட்டங்களில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 4-ம் தேதி திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரியை தொடங்கியது.
.இதனைதொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் எண்ணத்தை நிரந்தரமாக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருமானூர் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் கையெழுத்து இயக்கம் சார்பில் 3500 பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமியிடம் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் வழங்கினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டால் 8 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும், திருமானூர் ஒன்றியத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள்
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஜூன்.5-ம் தேதி வரை தற்காலிக தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you. https://www.gate.io/pt-br/signup/XwNAU