26 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
.
அரியலூர் அண்ணாசிலை அருகே 26 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வலிவுறுத்தி மாவட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமையிலும் மாவட்ட துணைத் தலைவர் குணசேகர் முன்னிலையிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவது, விடுமுறை நாள்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
தனி நபர் இல்லக்க கழிப்பறை கட்டுவதற்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தி ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும். கணினி இயக்குநர்களுக்கு 2014ஆம் ஆண்டுவெளியிடப்பட்ட அரசாணையின் படி, திட்ட தொழிலாளிகளின் தினக்கூலி அடிப்படையில் உயர்த்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ம் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பஞ்சாபிகேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.